முகப்பு
உலகம்

சீன உணவகத்தில் சிலிண்டர் வெடிப்பு: 31 பேர் பலி

சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 22 ஜூன், 2023 at 11:02 AM
சீன உணவகத்தில் சிலிண்டர் வெடிப்பு
பகிர்:

சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

டிராகன் படகு திருவிழா ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்களுக்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

விடுமுறையை தொடர்ந்து மின்சுவான் நகரில் உள்ள பிரபல பார்பிக்யூ உணவகத்தில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Advertisement

அந்த சமயத்தில் உணவகத்தின் எரிவாயு உருளை வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு உணவகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் அருகிலிருந்த சில கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.