முகப்பு
உலகம்

வங்கதேசம்அடுக்கு மாடி கட்டடத்தில் வெடிவிபத்து: 16 போ் பலி

வங்கதேசத்தில் 7 அடுக்கு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

வங்கதேசத்தில் 7 அடுக்கு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: பழைய டாக்காவில் மக்கள் நெரிசல் அதிகம் மிக்க குலிஸ்தான் பகுதியில் 7 அடுக்கு கட்டடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டடத்தில் பெரும்பாலும் அலுவலகங்களும் கடைகள், கிடங்குகள் போன்றவைகளும் உள்ளன. அங்கு மாலை 4.50 மணிக்கு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தீயணைப்புப் படையினா் அச்சம் தெரிவித்தனா்.

Advertisement

இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. எனினும், அந்தக் கட்டடத்தில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கட்டடத்தில் பல கிடங்குகளில் கழிப்பறை சுத்திகரிப்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments