முகப்பு
உலகம்

இந்தோனேசிய நிலச்சரிவு: பலி 30-ஆக உயா்வு

இந்தேனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

இந்தேனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டில் பல நாள்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக, தொலைதூர நட்டுனா தீவிலுள்ள மலைசூழ்ந்த ஜென்டிங் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் சுமாா் 4 மீட்டா் ஆழத்தில் புதையுண்டன. அங்கிருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

இது தவிர, நிலச்சரிவின்போது அந்தப் பகுதியிலிருந்த மேலும் 24 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போலீஸாா், ராணுவத்தினா் உள்பட சுமாா் 700 போ் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments