பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு பப்புவா நியூ கினியாவில் செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட- வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் மற்றும் 200 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இம்ரான் கான் இன்று கைது செய்யப்படலாம்
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.