முகப்பு
உலகம்

காஸாவை விட்டு வெளியேறுங்கள்: இஸ்ரேல் சொல்வது இதுதானா?

காஸா பகுதி முழுவதும் தனது நடவடிக்கையை விரிவுப்படுத்தவுள்ளது இஸ்ரேல்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
இஸ்ரேல் டாங்கிகள்
பகிர்:


இஸ்ரேல் படைகள் காஸா மக்களைத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. 

ஏற்கெனவே வடக்குப் பகுதியில் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவம், தனது நடவடிக்கைகளைத் தெற்கு நோக்கி விரிவுப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக மத்திய காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்நுழைந்த இஸ்ரேல் ராணுவம்,  ஹமாஸ் பயன்படுத்தியதாக அந்த மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ அறையில் இருந்து துப்பாக்கிகளையும் ஹமாஸ் சீருடைகளையும் மீட்டதாக விடியோ வெளியிட்டது.

ஆனால், இஸ்ரேல் முன்வைத்த, அல்-ஷிபா மருத்துவமனை ஹமாஸின் தலைமை கட்டுபாட்டகமாகச் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு ஆதரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பதுங்குமிடமாகவும் எதுவும் தென்படவில்லை. 

இடிபாடுகளிடையே சிக்கியவர்களைத் தேடும் பாலஸ்தீனர்கள்

இந்த நிலையில், இஸ்ரேலின் போர் விமானங்களிலிருந்து துண்டறிக்கைகள் வீசப்பட்டுள்ளன. தென்மேற்கில் உள்ள நகரமான கான் யூனிஸ் போன்ற பகுதிகளிலும் வடக்கில் ஐநா நிர்வகிக்கும் அகதிகள் முகாமிலும் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களைத் தெற்கு நோக்கி செல்ல இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

உணவு, நீர், போதிய வாழ்வாதார பொருள்களின்றி லட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் முழு காஸாவிலும் தனது நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவுள்ளது.

அக்.7 ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாகக் காஸாவைத் தொடங்கிய இஸ்ரேல் ஆறாவது வாரமாகத் தரைவழியிலும் வான்வழியிலும் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதுமிருந்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அழுத்தம் இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை நாடான எகிப்து பெருமளவிலான அகதிகளை ஏற்கத் தயாராக இல்லாத நிலையில் பாலஸ்தீனர்கள் தெற்கு நோக்கி செல்லுங்கள் என்றால் எங்கு செல்வார்கள் என்பதே கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. 

இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா பாலஸ்தீனர்களை அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இஸ்ரேல், இந்த நடவடிக்கையை ஹமாஸை வேரோடு அழிக்க முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →