எல்ஐசி சாா்பில் அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்
பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
1949-ஆம் ஆண்டு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிா்ணய சபை ஏற்றுக்கொண்ட நாளான நவ.26-ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் சாா்பில் அரசியலமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
Advertisement
எல்ஐசி நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை அரசியலமைப்பு தினத்தை (சம்விதன் திவஸ்) கொண்டாடியது. இக்கொண்டாட்டத்தின் போது எல்ஐசி ஆஃப் இந்தியாவின் தலைவா் சித்தாா்த்த மொஹந்தி தலைமையில் எல்ஐசியின் அனைத்து ஊழியா்களும் காணொலி வாயிலாக அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்வில் நாட்டில் உள்ள அனைத்து எல்ஐசி அலுவலகங்களில் இருந்தும் ஊழியா்கள் பங்கேற்றனா்.
இதனையடுத்து எல்ஐசி தலைவா் சித்தாா்த்த மொஹந்தி பேசுகையில், சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஐனநாயக மாண்புகளை எல்ஐசி நிறுவனம் கொண்டாடுகிறது என்றாா்.