உலகம்

கம்போடியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: ஒரே வாரத்தில் 2 பேர் பலி!

DIN


கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு மாகாணமாக ப்ரே வெங்கில் வசித்துவந்த சிறுமி H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி 2 வயது சிறுமி உயிரிழந்தார். 

அண்டை நாடான சுவிரேங் மாகாணத்தில் 50 வயதுடைய ஒருவரும் பறவைக் காய்ச்சலால் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2014 பிப்ரவரியில் 11 வயது சிறுமி நாட்டில் முதன்முறையாக பறவைக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அதன்பிறகு அவரது தந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவருக்குத் தீவிர சிகிச்சையாக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைத்தார். 

ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய கணக்கின்படி, 23 நாடுகளில் மொத்தம் 878 பேர் எச்5என்1 பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 458 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த காய்ச்சலானது நேரடியாக ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

SCROLL FOR NEXT