உலகம்

தேசிய உணர்வை புண்படுத்தும் ஆடைகளுக்குத் தடா: சீனா யோசனை

சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் ஆடை அணிவதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது.

DIN


சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் ஆடை அணிவதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவும், மீறினால் அபராதம், கைது நடவடிக்கையுடன் தண்டனை வழங்க வகை செய்ய சீனா பரிசீலித்து வருகிறது.

"சீன மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக" கருதப்படும் ஆடைகளை தடை செய்யும் சட்டத்தை சீன அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் தற்போது வரைவு நிலையில் இருப்பதாகவும், சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுவதையும் ஆடை அணிவதையும் தடை செய்யும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சீன நாடாளுமனற் நிலைக் குழு, வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறது. அதில் எந்த விதமான படங்கள், ஆடைகள், பேச்சுக்கள் இடம்பெறக் கூடாது என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.

கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஷாங்காய்க்கு அருகிலுள்ள சுஜோ நகரில் ஒரு பெண், ஜப்பானிய பாரம்பரிய உடையான கிமோனோவை பொது இடங்களில் அணிந்ததற்காக கைது செய்யப்பட்டார். மேலும் வானவில் படம் கொண்ட சட்டைகளை அணிந்தவர்கள் அல்லது எல்ஜிபிடிக்யூவின் சின்னங்களைக் கொண்ட கொடிகளை விநியோகிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, சீனா தற்போது பிறப்பித்த புதிய உத்தரவில், அரசு அமைப்பில் பணியாற்றுவோர் ஆப்பிள் ஐஃபோன்கள்  மற்றும் வெளிநாட்டு பிராண்டட் செல்போன்களைப் பயன்படுத்த தடை செய்து, அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு வரக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT