உலகம்

தேசிய உணர்வை புண்படுத்தும் ஆடைகளுக்குத் தடா: சீனா யோசனை

DIN


சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் ஆடை அணிவதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவும், மீறினால் அபராதம், கைது நடவடிக்கையுடன் தண்டனை வழங்க வகை செய்ய சீனா பரிசீலித்து வருகிறது.

"சீன மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக" கருதப்படும் ஆடைகளை தடை செய்யும் சட்டத்தை சீன அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் தற்போது வரைவு நிலையில் இருப்பதாகவும், சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுவதையும் ஆடை அணிவதையும் தடை செய்யும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சீன நாடாளுமனற் நிலைக் குழு, வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறது. அதில் எந்த விதமான படங்கள், ஆடைகள், பேச்சுக்கள் இடம்பெறக் கூடாது என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.

கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஷாங்காய்க்கு அருகிலுள்ள சுஜோ நகரில் ஒரு பெண், ஜப்பானிய பாரம்பரிய உடையான கிமோனோவை பொது இடங்களில் அணிந்ததற்காக கைது செய்யப்பட்டார். மேலும் வானவில் படம் கொண்ட சட்டைகளை அணிந்தவர்கள் அல்லது எல்ஜிபிடிக்யூவின் சின்னங்களைக் கொண்ட கொடிகளை விநியோகிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, சீனா தற்போது பிறப்பித்த புதிய உத்தரவில், அரசு அமைப்பில் பணியாற்றுவோர் ஆப்பிள் ஐஃபோன்கள்  மற்றும் வெளிநாட்டு பிராண்டட் செல்போன்களைப் பயன்படுத்த தடை செய்து, அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு வரக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

SCROLL FOR NEXT