உலகம்

லிபியாவை தாக்கிய டேனியல் புயல்: 2 ஆயிரம் பலி, பலர் மாயம்!

DIN

லிபியாவை தாக்கிய புயல், வெள்ளத்தில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

கிழக்கு லிபியாவில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. இங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்கள் பெருமளவில் பாதித்துள்ளது. பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். 

புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 5000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. புயலில் மாயமானவர்களை மீட்புப் படையினர் மும்மரமாகத் தேடி வருகின்றனர். 

வெள்ளம் பாதித்த டெர்னா நகரை பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஒசாமா ஹமாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT