எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் பிரபல மின்சார காா் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) எலான் மஸ்க், பணி தொடா்பான காரணங்களால் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
தொழிலதிபா் எலான் மஸ்க், ஏப். 21, 22 ஆகிய தினங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்திருந்தாா். இந்தப் பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்தச் சந்திப்பில் மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக பிரதமா் மோடியுடன் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்ப்பாா்க்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில், டெஸ்லா நிறுவன பணி காரணங்களுக்காகத் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளாா்.
இது குறித்து எலான் மஸ்க் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துரதிருஷ்டவசமாக டெஸ்லா நிறுவனத்தின் மிக அதிக பணிச் சுமையால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இந்தக் கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் மின்சார வாகனத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, இந்திய பயணம் குறித்த எலான் மஸ்கின் அறிவிப்பு, இந்தியாவில் டெஸ்லா மின்சார காா் தொழிற்சாலையை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அவா் அறிவிக்கலாம் என்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது.