முகப்பு
உலகம்

ஈரான் போர்! மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்

Updated On : 28 மார்ச், 2026 at 6:14 AM
டிரம்ப் - மோடி - எலான் மஸ்க் - சித்திரிப்பு
பகிர்:

இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமின்மை நிலவி வருகிறது.

இதனிடையே, போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, டிரம்ப்புடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையில் (மார்ச் 24) தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

போரின் பாதிப்புகள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், உலக அமைதி குறித்து இருவரும் உரையாடினர்.

இந்த நிலையில், இருவரின் தொலைபேசி உரையாடலில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் இணைந்திருந்ததாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டுத் தலைவர்களின் அதிகாரபூர்வ தொலைபேசி உரையாடலில் தனி நபர் ஒருவர் பங்கேற்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரிதான நிகழ்வாகவும் கொள்ளப்படுகிறது.

இந்த உரையாடலில் எலான் மஸ்க்கின் பங்கேற்பு குறித்தும், அவர் என்ன பேசினார் என்பது குறித்தும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளிலும் எலான் மஸ்க் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Elon Musk joins PM Modi-Trump call in unusual move amid Iran war: Report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.