ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!
15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 288 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக மாடல் ஒய் எல் 3 என்ற மின்சார கார் மலேசியாவில் இன்று (ஏப். 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என டெஸ்லா அறிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெஸ்லா நிறுவனம் சொகுசுக் கார்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் மாடல் ஒய் எல் 3 என்ற மின்சார காரை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏழு பேர் அமரும் வகையில் இடவசதி நிறைந்ததாகவும் சொகுசுக்கு குறைவில்லாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாடல் ஒய் எல் காரின் விலையானது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது. எனினும் இதற்கு முந்தைய மாடல் ஒய் எல்.ஆர்.-ஐ விட விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா மாடல் ஒய் எல் காரானது, 4,976 மி.மீ. நீளம், 2,129 மி.மீ. அகலம், 1,668 மி.மீ. உயரம் உடையது.
மின்னணு முறையில் இருக்கையில் அகலத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.
காரினுள் 18 ஒலிப்பெருக்கிகள் உள்ளன.
வெப்பத்தை ஈர்க்காத வகையில் சில்வர் நிற கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் பவர் 340kW ஆக உள்ளது. வேகத்திறனுக்காக 567Nm டார்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 201 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.
0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டலாம்.
இது மாடல் ஒய் ஆர்எல் காரை விட 0.2 விநாடிகள் குறைவு.
15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 288 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
வெள்ளை, வைரத்தின் கருப்பு, நீலம், சிவப்பு, சில்வர் ஆகிய வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
Tesla Model Y L electric SUV launch in Malaysia on 1 April: 681km range, supports V2L
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.