மேற்கு வங்க வன்முறை RAJIB DHAR
உலகம்

வங்கதேசத்தில் பதற்றம்; மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DIN

வங்கதேசத்தில், பிரதமர் பதவி விலகக் கோரி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதாகவும், அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே வங்கதேசம் - இந்தியா எல்லைப் பகுதியான மேற்கு வங்க எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

போராட்டத்தைக் கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் முஜிபூர் ரகுமானின் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT