இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான போராட்டம் | டெல் அவிவ் நகரம் படம் | ஏபி
உலகம்

காஸாவில் போர்நிறுத்தம்! இதுவே கடைசி வாய்ப்பு -இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காஸாவில் சண்டை 10 மாதங்களாகத் தொடருகிறது...

DIN

காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் படைக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போர், 10 மாதங்களைக் கடந்தும் தொடருகிறது.

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்பட கத்தாரில் கடந்த வாரம் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை, உடன்பாடு எட்டப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவர்த்தை இந்த வாரம் மீண்டும் நடைபெற உள்ளது. அதில் காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்பதை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் - ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க உள்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் 9-ஆவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். திங்கள்கிழமை(ஆக. 19) இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார்.

அமெரிக்க உள்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் | டெல் அவிவ் நகரம்

அப்போது, காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது, “பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை தாயகம் அழைத்து வரவும், போர்நிறுத்தம் ஏற்படுத்திடவும், அமைதியும் பாதுகாப்பும் நிலைத்திடும் வகையில் ஒவ்வொருவரையும் சிறந்த பாதையில் நிலைநிறுத்திடவும் இதுவே ஒரு மிகச்சிறந்த தருணம்” என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT