FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி மாற்றம்..? -அதிபர் ஸெலென்ஸ்கி ஆலோசனை

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி  மற்றும் அதிபர் ஸெலென்ஸ்கி  இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது.

Updated On : 5 பிப்ரவரி 2024, 4:57 pm IST
ராணுவ வீரர்களுடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
பகிர்:

கீவ் : உக்ரைன் ரஷியா இடையே தொடர்ந்து நீடித்து வரும் போர், 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாள்களே உள்ளன. இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முனைப்புக் காட்டாமல் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. 

இத்தகைய சூழலில், உக்ரைன் ராணுவ தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னி மற்றும் அதிபர் ஸெலென்ஸ்கி  இடையே கருத்து மோதல் நீடித்து வந்த நிலையில், ராணுவ தலைமை தளபதி பொறுப்பிலிருந்து விலகுமாறு கடந்த வாரம் அதிபர் ஸெலென்ஸ்கி அறிவுறுத்தினார். ஆனால் அதிபரின் முடிவை ஏற்றுக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.  இந்நிலையில், வலேரி ஜலுஷ்னி  உக்ரைன் ராணுவ தலைமை தளபதி பதவியை விட்டு நீக்கப்படுவது அதிபரின் பேட்டி மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “ஒரு புதிய தொடக்கம் அவசியமானது.  ராணுவ தலைமை மாற்றம் குறித்து ஆலோசித்து வருகிறேன், இது ஒரு தனிநபரைச் சார்ந்ததல்ல, நாட்டின் தலைமை எந்த திசையில் நாட்டை வழிநடத்துகிறது என்பதை பொறுத்தது.

Advertisement

Advertisement

ராணுவம் மட்டுமன்றி பல துறைகளிலும் தலைவர்களை மாற்றம் செய்வது குறித்து பேசுகிறேன். நாம் வெற்றி பெற வேண்டுமெனில், நாம் அனைவரும் கட்டாயம் ஒரே திசையில் உந்திச் செல்ல வேண்டும்.நம் கைகளை தளர்ந்துவிட விடக்கூடாது. நேர்மறையான ஆற்றல் அனைவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments