நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் 
உலகம்

வெற்றி பெற்றதாக அறிவிக்கும் பாகிஸ்தானின் இருபெரும் கட்சிகள்: தேர்தல் நிலவரம் என்ன?

பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வெளியாகி வருகிறது.

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி, தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளதாக அறிவித்துள்ளது. தாமதமாக வெளியாகும் முடிவுகள் மோசடி செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) வெளியிட்டுள்ள குறிப்பில் ஆட்சியில் உள்ள நவாஸ் ஷெரீபின் முஸ்லீம் லீக் கட்சி தனது தோல்வியை ஒப்புகொள்ளுமாறு கேட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி (பிஎம்எல்-என்), முன்கூட்டிய மற்றும் பாரபட்சமான ஊகங்கள் இது, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆதரமாக பிடிஐ, தனது வேட்பாளர்கள் 150-க்கும் அதிகமான இடங்களில் பெரும்பான்மை பெற்றதற்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 45 தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மோசடி செய்து பிடிஐ வேட்பாளர்களிடம் மிரட்டி பொய்யான படிவங்களில் கையெழுத்து பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது பிடிஐ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT