அமெரிக்கா சூப்பர் பெளல் விளையாட்டின் வெற்றி பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்ஸாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் பெளல் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் புதன்கிழமை ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேரணியின் முடிவில் ரசிகர்கள் மத்தியில் வீரர்கள் உரையாற்றிய சிறிது நேரத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது அடையாளம் தெரியாத நபர்கள் ரசிகர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.