முகப்பு
சஹீரா
உலகம்

‘பெண்கள் இனி அழ வேண்டியதில்லை’ -சஹீராவின் புதிய பாடல்!

பாடகி சஹீராவின் புதிய பாடல், மார்ச் 22-ல் வெளியாகவுள்ளது.

உலகம்

‘பெண்கள் இனி அழ வேண்டியதில்லை’ -சஹீராவின் புதிய பாடல்!

பாடகி சஹீராவின் புதிய பாடல், மார்ச் 22-ல் வெளியாகவுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 1:03 PM
சஹீரா
பகிர்:

47 வயதான லத்தீன் பாடகி சஹீராவின் புதிய பாடல், மார்ச் 22-ல் வெளியாகவுள்ளது.

11 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த கால்பந்தாட்ட வீரர் ஜெரார்ட் பிக் உடனான உறவு முறிவுக்குப் பிறகு பாடகி உருவாக்கியுள்ள பாடல் இது.

இந்த இசைத் தொகுப்பின் ஸ்பானிஷ் தலைப்புக்கான அர்த்தம் ‘பெண்கள் இனி அழ வேண்டியதில்லை’.

இது குறித்து சஹீரா ”இந்த பாடலை உருவாக்குவது என்பது ஒரு ரசவாத செயல்பாடாக இருந்தது. ஒவ்வொரு பாடலிலும் என்னை நானே மீட்டெடுத்து கொள்கிறேன். அவற்றைப் பாடும்போது என் கண்ணீர் வைரங்களாக மாறுகின்றன, எனது பலமே நான் எளிதில் பாதிக்கப்படுபவளாக இருப்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

வினய்ல் இசைத்தட்டு பதிப்பில் வெளிவரும் இவரது முதல் இசைத் தொகுப்பு இதுதான். இந்த புதிய பாடலோடு நான்கு தனித்துவமான பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

7 ஆண்டுகளாக பிறகு வெளிவரும் சஹீராவின் பாடல் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →