உலகம்

ரஷியா நவால்னி மரண விசாரணை நீட்டிப்பு

ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினை கடுமையாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணமடைந்தது தொடா்பான விசாரணையை அந்த நாட்டு அதிகாரிகள் மேலும் நீட்டித்துள்ளனா்.

DIN

ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினை கடுமையாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணமடைந்தது தொடா்பான விசாரணையை அந்த நாட்டு அதிகாரிகள் மேலும் நீட்டித்துள்ளனா்.

நவால்னி மரணம் குறித்த உண்மைகளை மறைப்பதற்காகவே விசாரணை நீட்டிக்கப்படுவதாக அவரது ஆதரவாளா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, புதின் உத்தரவின்படி சிறையில் நவால்னி கொல்லப்பட்டதாக அவரது மனைவி யூலியா நவால்னியா குற்றம் சாட்டியுள்ளாா்.

அதிபா் புதனுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வந்த நவால்னி, கருத்துத் தீவிரவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் விளம்பு வரை சென்று வந்த அவா், சிறையில் திடீரென வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT