முகப்பு
உலகம்

ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 92 ஆனது: 242 பேர் மாயம்!

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 92-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:24 PM
பகிர்:

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 92-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால், அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும் ஏற்பட்டது. 

இஷிகாவாவில் 13 நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 370 நிவாரண மையங்களில் மொத்தம் 33 ஆயிரம்  பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா். இது தவிர பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 242 போ் மாயமாகியுள்ளளனர். 

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையொட்டி உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புத் துறையினர் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →