பெரக்ரின் லூனாா் லேண்டா் 1, அந்த நாட்டின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 
உலகம்

நிலவுக்கு ஆய்வுக் கலம் அனுப்பியது அமெரிக்கா

நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது.

DIN

கேப் கனாவெரல்: நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின் லூனாா் லேண்டா் 1, அந்த நாட்டின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

யூனைட்டட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய வல்கன் ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி அந்த ஆய்வுக் கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கிய முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் பெறும்.

இதற்கு முன்னா் கடந்த 1972-ஆம் ஆண்டில்தான் நிலவுக்கு அமெரிக்கா தரையிறங்கும் ஆய்வுக் கலத்தை அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT