சீன ராக்கெட் 
உலகம்

விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்

சீனாவில் உருவாக்கப்பட்டுவரும் சக்திவாய்ந்த ராக்கெட், தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

Din

சீனாவில் உருவாக்கப்பட்டுவரும் சக்திவாய்ந்த ராக்கெட், தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

இது குறித்து அந்த ராக்கெட்டை சோதித்துவரும் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ் பயனீா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தியான்லாங்-3 ராக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. எனினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

விபத்தைச் சந்தித்த தியான்லாங்-3 ராக்கெட்தான் சீனாவின் அதிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT