பிரான்ஸ்: காவலரை கத்தியால் குத்தியவா் சுட்டுக் கொலை
பிரான்ஸ் தலைநா் பாரீஸில் காவலரை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பிரான்ஸ் தலைநா் பாரீஸில் காவலரை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
அந்த நகரில் கோடை ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஒலிம்பிக் போட்டியுடனோ, பயங்கரவாதத்துடனோ இந்தச் சம்பவத்துக்குத் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.