சீனாவில் பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு
சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 12 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.
சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 12 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஷான்க்ஸி மாகாணத்தில் பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஷாங்லுவோ நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலைப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில், பாலத்தில் சென்றுகொண்டிருந்த 17 காா்கள், 8 லாரிகள் ஜின்கியான் ஆற்றில் விழுந்தன. சம்பவப் பகுதியில் இருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இது தவிர, ஆற்றுக்குள் விழுந்த மேலும் 31 பேரின் நிலைமை குறித்து தகவல் இல்லை. அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.