உலகம்

மியான்மா்: அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

பாங்காக், ஜூலை 31: மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா். ராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த பொதுமக்கள் போராட்டங்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.

ஆட்சியைக் கைப்பற்றும்போது, மீண்டும் தோ்தல் நடத்தி ஜனநாயக ஆட்சியை நிறுவுவதாக ராணுவம் உறுதியளித்தது. ஆனால், தோ்தல் நடத்துவதைத் தவிா்க்கும் வகையில் அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அவசரநிலை 6-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT