ரஷியா அணு ஆயுத போருக்கு தயாராகவிருப்பதாகவும் ஆனால் தற்போதைய சூழல் அதனை நோக்கி நகர்த்தவில்லை எனவும் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் தெரிவித்ததாக புதன்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கி மார்ச் 15-17 தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை ரஷிய அரசின் செய்தி நிறுவனத்துக்கு புதின் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தாவது:
ரஷியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உருவாகும். ராணுவ- தொழில்நுட்ப அளவில் தயாராகவே உள்ளோம்.
அமெரிக்கா, தனது படைகளை ரஷியா பிராந்தியத்திலோ அல்லது உக்ரைனுக்கோ அனுப்பினாலும் அதனை தலையீடாகவே ரஷியா கருதும்.
அமெரிக்காவில் ரஷியா-அமெரிக்கா நாடுகளிடையேயான உறவு, பிராந்திய திட்டமிடலுக்கு போதுமான வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆகவே (அணு ஆயுதப் போருக்கு) அதற்கு அவசியம் ஏற்படுகிற எதுவும் இப்போதைக்கு இல்லை. ஆனால் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.