கத்தாரில் உள்ள அல்-ஜசீரா தலைமை அலுவலகம் AFP
உலகம்

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

இஸ்ரேல் போலீஸாரின் திடீர் சோதனை: அல்-ஜசீரா அலுவலகம் குறிவைப்பு

DIN

நாசரேத் நகரத்தில் உள்ள அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் போலீஸார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டதுடன் அல்-ஜசீராவுக்குச் சொந்தமான கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

கத்தாரை மையமாகக் கொண்ட அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸ்ரேல் அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாள்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல், அல்-ஜசீரா சேனலின் ஒளிபரப்பையும் முடக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதே நாளில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஜசீரா அலுவலகத்தில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியது.

காஸா போர் தொடர்புடைய நிகழ்வுகளை செய்தியாக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அல்-ஜசீரா மீது குற்றம் சுமத்தினார்.

இதனை மறுத்துள்ள அல்-ஜசீரா, இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனித உரிமைகள் மற்றும் தகவல் பெறும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

அல்-ஜசீரா தனது பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனத்தின் உரிமையைக் காக்க இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட Seeman!

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இந்திய அணியில் இடம்பிடிக்க உதவும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியீட்ட வெல்கியூர்!

டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

SCROLL FOR NEXT