புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஹோட்டல்களில் போலீஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், ஹோட்டல் விருந்தினர்களின் அறைகள் மற்றும் பொருட்களை சோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களின் அடையாள அட்டைகளையும் அவர் சரிபார்த்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். புல்வாமா தாக்குதலின் ஏழாவது ஆண்டு நாளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.