நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனாவால் மே 3-இல் செலுத்தப்பட்ட சாங்கே-6 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் ‘ஐக்யூப்-கமா்’ செயற்கைக்கோள் முதல்முறையாக படங்களை அனுப்பத் தொடங்கியது.
அந்த சிறு செயற்கைக்கோள், பாகிஸ்தானின் முதல் நிலவு ஆய்வுக் கோளாகும்.