முகப்பு
உலகம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்!

அஸ்கெலோனில் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் காயம்

Updated On : 12 மே, 2024 at 10:54 AM
ஏவுகணை தாக்குதல் (கோப்புப் படம்)
பகிர்:

இஸ்ரேல் கடற்கரை நகரமான அஸ்கெலோனில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காஸா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் சமீபத்தில் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் கரீம் சலோம் எல்லைப் பகுதியும் சனிக்கிழமை தாக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவுக்குள் நிவாரண உதவிகள் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட இந்த எல்லைப் பகுதி மீது நான்கு கணைகள் ஏவப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தகர்த்ததாகவும் வாழ்விடமில்லாத இடங்களான இவற்றில் ஏவுகணை விழுந்ததால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காஸாவின் தெற்குப் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இந்தத் தாக்குதல்களை தொடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →