முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் பயங்கர விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தானில் நேரிட்ட சாலை விபத்தில் 28 பேர் பலியாகினர்.

Updated On : 29 மே, 2024 at 11:37 AM
accident
பகிர்:

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 28 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர்.

துர்பத் முதல் குவெட்டா நோக்கிச சென்று கொண்டிருந்த பேருந்து, வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம், பேருந்து அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பேருந்தின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் சாலை விபத்துகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.

இந்த மே மாதத்தில் மட்டும் 18ஆம் தேதி நேரிட்ட விபத்தில் 13 பேரும், கடந்த 3ஆம் தேதி நேரிட்ட விபத்தில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.