முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 50 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:06 PM
பகிர்:

பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டம் வழியாக சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா்.

அந்த வாகனங்கள் பாரசினாா் நகரிலிருந்து பெஷாவரை நோக்கி அணியாகச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், எட்டு பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 50 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலனவா்கள் ஷியா முஸ்லிம் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் கூறினா்.

தாக்குதலுக்குள்ளான வாகன அணிவகுப்பில் 200 வாகனங்கள் இருந்ததாகவும், சம்பவப் பகுதி தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி எனவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →