நைஜீரியாவில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் 33 பேர் கொலை... (கோப்புப் படம்) AP
உலகம்

நைஜீரியாவில் கால்நடைகளுக்காக 33 பேரைக் கொன்ற ஆயுதக்குழு!

நைஜீரியாவில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பி மாநிலத்தின் பியு பகுதியில், கடந்த புதன்கிழமை (பிப். 18) லகுராவா ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள கால்நடைகளைத் திருடுவதற்காக ஆயுதக்குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆயுதக்குழுவினர் சோகோட்டோ மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, வடமேற்கு நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் லகுராவா ஆயுதக்குழு கால்நடைகளைத் திருடுவது, கிராமங்களில் தாக்குதல் நடத்துவது, கடத்தல் மற்றும் பணம்பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், பல்வேறு ஆயுதக்குழுக்கள் மற்றும் பயங்கரவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரிய வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் வருகை தருவதாக, கடந்த வாரம் அந்நாட்டு ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

33 people have been killed in a sudden attack by armed militants in the West African country of Nigeria.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்

பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன்

மறக்க முடியாத பிறந்த நாள்..! அனுபமா நெகிழ்ச்சி!

103 மீட்டர் சிக்ஸர்.. கிழிந்த காலணிகள்.. திடீரென வைரலான ஜிம்பாப்வே வீரரின் பதிவு!

SCROLL FOR NEXT