நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 33 போ் கொலை
நைஜீரியாவில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டது குறித்து...
வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற லகுராவா பயங்கரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்களில் 33 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அண்டை மாகாணமான சோகோட்டோவில் இருந்து ஊடுருவிய இந்தப் பயங்கரவாதிகள், கால்நடைகளைத் திருடும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அங்கு அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் கூடுதல் ராணுவத்தினா் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் நிலவும் இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க, அந்நாட்டு அரசு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நைஜீரிய வீரா்களுக்குப் பயிற்சியளிக்க 100 அமெரிக்க வீரா்கள் அங்கு வந்துள்ளனா்.
33 people have been killed in a sudden attack by armed militants in the West African country of Nigeria.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.