லாவோஸில் விஷச் சாராயத்துக்கு 6 சுற்றுலா பயணிகள் பலி!
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் மது அருந்தியுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் அவர்கள் அருத்திய மதுவில் விஷத்தன்மையுடைய மெத்தனால் கலந்து இருந்தது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!
உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் ஒருசிலர் மேல் சிகிச்சைக்காக அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு ஆஸ்திரேலிய இளைஞர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இந்நிகழ்வையடுத்து லாவோஸ் செல்லும் தங்கள் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.