உலகம்

உகாண்டாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 40 வீடுகள்! 13 பேர் பலி

உகாண்டா நிலச்சரிவில் 40 வீடுகள் மண்ணில் புதைந்ததில் 13 பேர் பலியாகினர்.

DIN

கிழக்கு உகாண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகாண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், “மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்றனர்.

தீயினால் காற்று மாசு: ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் பலி!

மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது- ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT