உக்ரைன் ராணுவ நிலையை நோக்கி கண்காணிப்பு ட்ரோனை பறக்கவிட்ட ரஷிய படையினா்.  
உலகம்

மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா

உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Din

உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த ஒலெஷன்யா பகுதியை உக்ரைன் ஆக்கிரமிப்பில் இருந்து ரஷிய ராணுவம் மீட்டுள்ளது. வடக்கு படைப் பிரிவினா் நடத்திவரும் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த ஊா் மீட்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசை திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் தொடா்ந்து முன்னேறி வரும் ரஷிய படையினா் கூா்க்ஸ் பிராந்தியத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளனா்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT