முகப்பு
உலகம்

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

Updated On : 20 ஏப்ரல் 2025, 4:48 pm IST
உக்ரைனில் காயமடைந்த ஒரு வீரர் - AP
பகிர்:

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு தற்காலிக தீர்வாக, ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல்வேறு குண்டு வீச்சு தாக்குதல்கள் உக்ரைன் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று(ஏப். 20) தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

உக்ரைன் - ரஷியா இடையிலான சண்டைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மேற்கண்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க தங்கள் தரப்பு விரும்புவதாகவும், ஆனால், ரஷியா இதே பாணியில் தாக்குதல்களை நடத்தினால், உக்ரைனும் தீவிர எதிர்வினையாற்றும் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments