புதின் - டிரம்ப்  
உலகம்

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

“ஒப்பந்தம் எட்ட விருப்பமிருந்தால் அதை அவர்கள் எப்போதோ செய்திருக்கலாம்” - உக்ரைன் மக்கள்

இணையதளச் செய்திப் பிரிவு

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆக. 15-ஆம் தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பேசுகிறார். உக்ரைன் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்ட இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு சனிக்கிழமை(ஆக. 9) வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்:

“அங்கே அவர்கள் ஏதோ பேசிக்கொள்ளட்டும், இங்கே மக்கள் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாயிருந்தால் அல்ல ஒப்பந்தம் எட்ட விருப்பமிருந்தால் அதை அவர்கள் எப்போதோ செய்திருக்கலாம். அதைச் செய்யவில்லை”.

“இந்த சந்திப்பு வெறும் காட்சிப்போக்குக்காக மட்டுமே”

“புதினின் மரித்த உடல் எடுத்துச் செல்லப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். ஒருவேளை அதன்பின்னராவது நிலைமை மாறலாம்” ஆகிய கருத்துகள் உக்ரைனில் பரவலாக எழுந்துள்ளன.

Ukrainians in Kyiv have been giving us their reaction to the upcoming meeting between US President Donald Trump and his Russian counterpart, Vladimir Putin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT