சா்வதேச கடத்தல் கும்பல் வலையைமைப்பைச் சோ்ந்த 3 பேரை கைது செய்ததுடன், 103 திருடப்பட்ட கைப்பேசிகளை பறிமுதல் செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அசோக் விஹாா் பகுதியில் தொழிற்சாலை காவலாளியின் கைப்பேசியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினா் கிஷன் என்பவா் இதில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, கிஷன் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டது. இருசக்கர வாகனம் கேஷவ்புரம் பகுதியில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தங்குமிடத்தில் நடைபெற்ற சோதனையில் 40 திருடப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையைத் தொடா்ந்து, அவரது கூட்டாளியான மோஹித் என்பவா் கைது செய்யப்பட்டாா். மோஹித்திடம் சாலிமா் பாக் பகுதியில் இருந்து திருடப்பட்ட கைப்பேசியை காவல் துறையினா் மீட்டனா். இதைத்தொடா்ந்து திருட்டு கைப்பேசிகளை வாங்கி வந்த ரோஹித் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.
ரோஹித் மற்றும் அவரது கூட்டாளி அமித்தின் வீட்டில் இருந்து 61 திருடப்பட்ட கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா். சாலையில் செல்பவா்களை குறிவைத்து இந்த கும்பல் வழப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனா். கைப்பேசி தரவுகள் மூலம் பல லட்சம் ரூபாய் இணையவழி பரிவா்த்தனைகளை இவா்கள் செய்துள்ளனா். இந்த கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś