முகப்பு
உலகம்

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.

Updated On : 6 டிசம்பர், 2025 at 2:52 PM
கோப்புப்படம்.
பகிர்:

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.

தென்னாப்பிரிக்காவின் சால்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் உள்ள உரிமம் பெறாத மதுபான விடுதியில் சனிக்கிழமை அதிகாலை நுழைத்த அடையாளம் தெரியாதவர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பத்து பேர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மருத்துவமனையிலும் பலியானதாக அவர்கள் கூறினர். மேலும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், காயமடைந்தவர்களின் நிலைமைகள் குறித்து போலீஸார் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் மாதே கூறுகையில், விடுதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாதவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு அதிகாலை 4.15 மணியளவில் நடந்தது.

அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் அதிமுக: துணை முதல்வர் உதயநிதி

ஆனால் போலீஸாருக்கு காலை 6 மணிக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்தார்.

summary

A mass shooting carried out Saturday by multiple suspects in an unlicensed bar near the South African capital left at least 11 people dead, police said.

முழு கட்டுரையைப் படிக்க →