இம்ரான் கான் படம் | ஏஎன்ஐ
உலகம்

இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

இம்ரான் கான் அரசியலில் ஈடுபடத் தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது பிடிஐ(பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சிக்கும் அரசியலில் தடை விதித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முதன்மைக் குற்ரச்சாட்டு சுமத்தப்பட்டு ஊழல் வழக்குகளில் அவர் சிறையிலடைகப்பட்டுள்ளார். இந்த நிலையில், ‘எதிரி நாட்டின் கருவி’ என்று இம்ரான் கானையும் அவரது கட்சியையும் விமர்சித்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக பஞ்சாப் பேரவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 9) நிறைவேற்றப்பட்டது.

பேரவையில் ஆளுங்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை பிடிஐ கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் இம்ரான் கான், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த நிலையில், இந்தியாவைப் போன்ற 5 மடங்கு வலிமையான எதிரியைக்கூட வெற்றிகரமாக எதிர்கொண்ட ராணுவம் உள்பட நாட்டின் அரசு நிறுவனங்களை பாதுகாப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pakistan's Punjab Assembly on Tuesday passed a resolution to ban jailed former prime minister Imran Khan and his Pakistan Tehreek-e-Insaf (PTI) party from politics for being what it described as "a tool of the enemy state".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: பினராயி விஜயன் வாக்களித்தார்!

அமித் ஷா கைகள் நடுங்கின; என் சவாலை அவர் ஏற்கவில்லை! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT