அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி; 9 பேர் கவலைக்கிடம்!
அமெரிக்காவில் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமையில் (டிச. 13) தேர்வுக்காக மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், உள்நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனை சிகிச்சையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உடனடியாக சம்பவ இடத்தைவிட்டு வெளியேறிய நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், உயிரிழந்தவர்களுக்காக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
2 people were killed and 9 others injured in shooting at Brown University
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.