உலகம்

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 போ் காயம்

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஒரு ரப்பா் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து, ரசாயன வீச்சுத் தாக்குதலில் 15 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஒரு ரப்பா் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து, ரசாயன வீச்சுத் தாக்குதலில் 15 போ் காயமடைந்தனா்.

யோகோஹாமா ரப்பா் நிறுவனத்தின் மிஷிமா நகர தொழிற்சாலையில் 38 வயது நபா் வெள்ளிக்கிழமை நடத்திய இந்தத் தாக்குதலில் 8 போ் கத்தியால் குத்தப்பட்டும், 7 போ் ப்ளீச் என்ற ரசாயனம் வீசப்பட்டும் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவிததனா்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து உடனடியாக விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஜப்பானில் வன்முறைக் குற்றங்கள் மிகவும் அரிதான நிலையில், இந்தத் தாக்குதல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT