நாளை பதவியேற்கவுள்ள டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! ஏன்?
டிரம்ப்பிசத்துக்கு எதிராக வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப், நாளை (ஜன. 20) பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், 'டிரம்ப்பிசத்தை' எதிர்ப்பதாகக் கூறி, தலைநகர் வாஷிங்டனில் 3 வெவ்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர், பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலநிலை மாற்றம், குடியேற்றம், பெண்கள் உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டிலும் டிரம்ப் பதவியேற்பின்போது, இவ்வாறான போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதுதவிர, அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சி பொதுவெளியில் நடத்த இயலாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடிய திடலுக்குள் நடத்தப்படும் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண, கேபிடல் ஒன் அரினா ஹாக்கி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் டிக் டாக் சேவை நிறுத்தம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.