சூடான்.  Photo credit: IANS
உலகம்

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின்பகுதியளவு இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் விபத்து ஏற்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுரங்கப் பணியை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. சூடானில் மோசமான பாதுகாப்பு காரணமாக இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு 38 தொழிலாளர்களும், 2023ஆம் ஆண்டு 14 தொழிலாளர்களும் இதுபோன்ற சம்பவங்களில் பலியாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சூடானின் தங்கத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சுமார் 1.5 மில்லியன் சுரங்கத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இது 2024இல் மொத்தம் 64 டன்களாக இருந்தது.

Summary

At least 11 people were killed and seven injured after a gold mine collapsed in northeastern Sudan, state-run Mineral Resources Company said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில்! அரசு நிதி முறைகேடு புகார்

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க! ஆக. 26 வரை காவல்!

இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி?

SCROLL FOR NEXT