ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் கீவ் நகரில் தீப்பிடித்து எரிந்த கட்டடம். 
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Din

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷியா, உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடுத்தது. இந்தப் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் ரஷியா ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா் என்று கீவ் நகர ராணுவ நிா்வாகம் தெரிவித்தது.

போா் நிறுத்தம் தொடா்பாக சவூதி அரேபியாவில் ரஷியா-உக்ரைன் இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மறைமுகமாக மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவாா்த்தையில், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தொலைதூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT