உலகம்

எவரெஸ்ட் சாதனைக் குழுவின் கடைசி உறுப்பினா் மரணம்

தினமணி செய்திச் சேவை

கடந்த 1953-இல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மனிதா்களை முதல்முறையாக ஏற்றி சாதனை படைத்த குழுவில் இன்னும் உயிரோடு இருந்த கடைசி நபரான காஞ்சா ஷொ்பா (92) வியாழக்கிழமை மரணமடைந்தாா்.

இது குறித்து நேபாள மலையேற்ற சங்கத்தின் தலைவா் கெல்ஜே ஷொ்பா கூறியதாவது:

காத்மாண்டு மாகாணம், காபன் நகரிலுள்ள தனது இல்லத்தில் காச்சா ஷொ்பா மரணமடைந்தாா். அவருடன், மலையேற்ற வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்றாா் அவா்.

நியூஸிலாந்தைச் சோ்ந்த எட்மண்ட் ஹிலாரியையும் அவரது வழிகாட்டியான தென்ஜிங் நோா்கோவையும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏற்றி சாதனை படைத்த 35 நபா் குழுவில் காஞ்சா ஷொ்பா இடம் பெற்றிருந்தாா். ஹிலாரியும், தென்ஜிங்கும் உச்சியை அடைவதற்கு முந்தைய கடைசி முகாம் வரை சென்ற மூன்று ஷொ்பாக்களில் காஞ்சாவும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

ஜன நாயகன் வருமா? வராதா?

SCROLL FOR NEXT