இந்தியா உள்பட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் அரசு!
அமெரிக்காவின் நட்பு நாடுகளை டிரம்ப் அரசு அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் விமர்சனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பள்ளியில் அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் ஜினா ரைமோண்டோ பேசுகையில், ``இந்தியாவுடன் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். டிரம்ப் நிர்வாகம், நமது அனைத்து நட்பு நாடுகளையும் கோபப்படுத்தியுள்ளது.
அமெரிக்காதான் முதலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவைத் தரும் கொள்கையாகும்.
Advertisement
Advertisement
ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியாவின் (ஜப்பான்) பெரும்பகுதியுடன் வலுவான உறவுகள் இல்லாத அமெரிக்கா, ஒரு வலுவற்ற அமெரிக்காவாகத்தான் இருக்கும். ஐரோப்பாவுடன் நாம் மிகவும் வலுவான வணிக உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவுடனான உறவில் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்.
எல்லாவற்றையும் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!
'We're making a big mistake with India': Former US Commerce Secretary warns Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.