காஸாவுடன் மீண்டும் போர்நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!
காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், போர் நிறுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் மஞ்சள் கோடு என்று அழைக்கப்படும் பகுதியின் கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சுமார் 60 பேர் பலியாகினர்; 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில்தான், காஸாவுடன் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!