முகப்பு
உலகம்

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி..

Updated On : 31 அக்டோபர் 2025, 12:38 pm IST
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு
பகிர்:

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.

எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்கா மாகாணத்தின் ஆளுநர் பீட்டர் இபடாஸ், இந்த நிலச்சரிவில் உள்ளூரைச் சேர்ந்த 30 பேர் வரை இறந்துள்ளதாகவும், 18 உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பப்புவா நியூ கினியா அரசு 2,000 க்கும் மேற்பட்டோர் புதைந்ததாகக் கூறப்படுகிறது.

summary

A landslide early Friday morning killed at least 21 people in Papua New Guinea's highlands, Australian media reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.